அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்கக் கடலில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்தத் தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலு பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும், அந்த புயலுக்கு ஜாவித் என்று பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமாக வலுப்பெற்று வழக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே நாளை மறுநாள் அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் ஒடிசா மாநிலத்திற்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.