Categories
மாநில செய்திகள்

#BREAKING: திருமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைப்பு…..!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது.

இதையடுத்து நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிலையில் திருமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் 27 கவுன்சிலர்களில் 13 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்ததால் தேர்தல் அதிகாரி தேர்தலை ஒத்திவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |