Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில் – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது.

இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து +1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 9 ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் விருப்பத்தின்படி பிரிவுகளை ஒதுக்கவேண்டும். பத்தாம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் நுழைவுத்தேர்வு நடத்த தேவை இல்லை எனவும் அறிவித்துள்ளது.

Categories

Tech |