தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளர், தேவேந்திர குலத்தான், காலாடி, பண்ணாடி, குடும்பன் கடையன் பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திர குல வேளாளர் பெயரில் ஜாதி சான்றிதழ் பெறலாம். குடியரசுத் தலைவர் ஏற்கனவே ஒப்புதல் அளித்த நிலையில், இந்த சட்டத்திருத்தம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த சட்டத்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Categories
BREAKING: தமிழகம் முழுவதும் அமல்…. தமிழக அரசு புதிய உத்தரவு….!!!
