தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஜனவரி 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஆலோசனை நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.