Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்…. அணியாவிட்டால் அபராதம்…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு மற்றும் முக கவசம் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதிய கொரோனா பரவால் வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளும் பொதுமக்களும் சமூக இடைவேளையுடன் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என சி எம் டி ஏ அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |