Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் புதியதாக 11 பேருக்கு ஒமைக்ரான்…. பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ  நெருங்குகிறது. தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு முதன் முதலாக ஒமைக்ரான்  தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 11 பேருக்கும் ஒமைக்ரான் உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இது தமிழக மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |