Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் உடனடி அமல்… மறு உத்தரவு வரும் வரை அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை அனைத்து திரையரங்குகளிலும் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன் பிறகு 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்பிறகு விஜய் மற்றும் சிம்பு போன்ற நடிகர்கள் தங்கள் படம் வெளியாக இருப்பதால் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது விதி மீறல் என மத்திய அரசு தெரிவித்த நிலையில், அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்ற உத்தரவை உடனே அமலுக்கு வருகிறது. மேலும் உயர் நீதிமன்ற உத்தரவுபடி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |