நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 19 வயது தனுஷ் என்ற மாணவன் நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான். மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தனுஷ் வீட்டில் உள்ள முற்றத்தில் நீட் தேர்வின் அச்சம் காரணமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு தாய் பெரும் அதிர்ச்சியடைந்தார். இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில் நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் அருகே நீட்தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு முழுமையாக விலக்கு பெற தீர்மானம் நிறைவேற்றபடும்.
மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தும் சிரமங்களை புரிந்துகொள்ளாத ஒன்றிய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ- மாணவிகளின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள், ஆள்மாறாட்டம் மற்றும் மாணவர்களின் தற்கொலைகள் கூட ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை :