தங்கம் விலை பவுனுக்கு ரூ 31ஆயிரத்தை தாண்டியதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை தாண்டியது .இன்று சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 25 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாய்யும் உயர்ந்து விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 அதிகரித்து ரூ 31,184-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 25 அதிகரித்து ரூ 3898 _க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ஒரு கிராமுக்கு ரூபாய் 49.90-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை 31,000த்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் வேதனைஅடைந்துள்ளனர்.