நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பகுதி ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திரையரங்கம், உடற்பயிற்சி கூடம், விருந்து மண்டபம், பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட டெல்லி அரசு திட்டம் என தெரிவித்துள்ளது.