மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோவிலை முதல்வர் மற்றும் துணை முதல்வர் திறந்து வைத்தனர்.
மதுரை திருமங்கலம் அருகே முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஏற்பாட்டில் கோவில் அமைக்கப்பட்டது. இந்த கோவிலை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். இந்த விழாவில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.