ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று (மார்ச் 8) தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவுக்கு மாரடைப்புதான் ஏற்பட்டது. சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் நாங்கள் முறையாக பின்பற்றினோம் என்று மருத்துவர் மதன்குமார் பதிலளித்துள்ளார். இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.
ஜெயலலிதா இறப்பதற்கு முந்தைய நாட்களில் அவருக்கு உயிரை காக்கும் அனைத்து சிகிச்சைகளும் முறையாக அளிக்கப்பட்டதா? என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை ஏற்பட்டது மாரடைப்புதான் என்று அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் பதிலளித்துள்ளார். மேலும் மாரடைப்பு ஏற்பட்ட போது ஜெயலலிதாவின் உயிரை காப்பதற்கான அனைத்து சிகிச்சை முறையும் தரப்பட்டது என்றும் மருத்துவர் பதில் அளித்துள்ளார்.