Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஜூலை-5 முதல் கூடுதல் தளர்வு – சற்றுமுன் அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள் முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஜவுளி, நகை கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். கடற்கரையில் தடுப்புகள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க கண்காணிப்பு தீவிரபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |