Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜூலை 31ஆம் தேதி வரை பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது – தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன் ஜூலை 31-ஆம் தேதி வரை தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை என்பது இயக்கப்படாது என்று தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு வழிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வரக்கூடிய நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது போக்குவரத்து சேவை என்பது கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நிறுத்தப்பட்டது..

இந்த நிலையில் மேலும் நீட்டித்து தற்போது அமலில் இருக்கக்கூடிய இந்த சேவை ஜூலை 31-ஆம் தேதி வரை  தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து சேவை என்பது இயக்கப்படாது என்று அறிவித்துள்ளது. 31 ஆம் தேதி வரை ஏற்கனவே பொதுமுடக்கம்  என்பது ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய சூழலில், பேருந்து போக்குவரத்து சேவையும் இயக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

Categories

Tech |