Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜாலியோ ஜாலி…. அரசு ஊழியர்களுக்கு…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி தீர்க்கமான நடவடிக்கை அரசின் வருவாய் பற்றாக்குறை 4.16 சதவீதத்திலிருந்து 3.O8 சதவீதமாக குறைவு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தலாக இருந்த நிலையில் தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. இக்கட்டான சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும் தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

* அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியத்திற்காக ரூ.19,000 கோடி நிதி ஒதுக்கீடு

* ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சிதிலமடைந்த கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

* இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.340.87 கோடி நிதி ஒதுக்கீடு

* அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2க்கு ரூ.1,455 கோடி நிதி ஒதுக்கீடு

* சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களுக்கு ரூ.705 கோடி நிதி ஒதுக்கீடு.

Categories

Tech |