Categories
மாநில செய்திகள்

BREAKING : செஸ் ஒலிம்பியாட் போட்டி…… நிகழ்ச்சிக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி….!!!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கியுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போஸ்பாயிண்ட் ரிசர்ட் என்கின்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற்று வருகிறது. இதற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.

187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி விழாவில் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பிரதமர் மோடி தற்போது வந்தடைந்தார்.

Categories

Tech |