சபர்மதி ஆசிரமம் வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தை வந்தடைந்தார்.
முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ட்ரம்பை பிரதமர் மோடி கட்டியணைத்து , கைகுலுக்கி வரவேற்றார். இந்திய பாரம்பரிய முறைப்படி அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து விரைந்த ட்ரம்ப் சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தார். அவரை பிரதமர் மோடி சால்வை அனுவித்து வரவேற்ற மோடி ட்ரம்ப் மற்றும் மெலனியாவுக்கு கதர் ஆடை வழங்கினார்.பின்னர் காந்தி போட்டோவுக்கு மோடி ,ட்ரம்ப் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர். அங்கிருந்த ராட்டை மனைவியுடன் ட்ரம்ப் சுற்றி பார்த்து வியந்தார்.
இதை தொடர்ந்து மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய்படேல் கிரிக்கெட் மைதானம் வந்தடைந்தார். பாதுகாப்பு வாகனகள் புடைசூழ மைதானத்துக்குள் வந்த ட்ரம்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். இங்கு நடைபெறும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் 1.10 லட்சம் மக்கள் பங்கேற்கின்றனர்.