Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: சபரிமலையில் மண்டல பூஜையுடன்…. இன்று நடை அடைப்பு…!!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் சபரிமலையில் இன்று மண்டல பூஜையுடன் நடை அடைப்பு செய்யப்படுகிறது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில் ஜனவரி 14 தேதி  மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

Categories

Tech |