Categories
மாநில செய்திகள்

Breaking: கோவில்பட்டியில் கி.ராவுக்கு சிலை…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…..!!!!

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் ஆகச் சிறந்த கதைசொல்லி எழுத்தாளர் கி. ராஜ நாராயணன் காலமானார். கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று அழைக்கப்பட்ட இவர் மறைவே ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பேரிழப்பு. கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள் மற்றும் ஏமாற்றங்களை இவரது எழுத்துக்கள் விவரித்தன. வாய்மொழிக் கதை சொல்லும் மரபின் கூறுகளை தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாக கொண்டிருந்தார். 99 வயதுடைய இவர் வயது மூப்பு  காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கரிசல் குயில் கி.ராவின் இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுபிக்கப்படும்.அவர் நினைவிடத்தில் அவரது புத்தகங்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories

Tech |