Categories
தேசிய செய்திகள்

BREAKING: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது…. அதி கனமழை எச்சரிக்கை…. சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் இன்று தமிழகத்தில் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதலே தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிகிறது. கரையை கடந்த பிறகு அரபிக் கடலை நோக்கி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |