Categories
தேசிய செய்திகள்

#BREAKING: கருவுற்ற பெண்களுக்கு பணி நியமனம் இல்லை…. உத்தரவை ரத்து செய்தது பாரத ஸ்டேட் வங்கி….!!!!

திருமணம் செய்ய நினைக்கும் பெண்களுக்கும், குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்களுக்கும் வேட்டு வைக்கும் அதிர்ச்சி அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. அதாவது 3 மாத கர்ப்பமாக உள்ள பெண்கள் பணி நியமனத்துக்கு தற்காலிகமாக தகுதியற்றவர்கள். எனவே அவர்கள் பிரசவத்திற்கு பின் 4 மாதம் கழித்து பணியில் சேர அனுமதிக்கப்படுவர் என எஸ்பிஐ வங்கி அறிவித்தது.

ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை. அதோடு மட்டுமில்லாமல் எஸ்பிஐ-யின் இந்த அறிவிப்பானது பெண்களின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கருவுற்ற பெண்களுக்கு பணிநியமனம் இல்லை என்ற உத்தரவை ரத்து செய்வதாக பாரத ஸ்டேட் வங்கி சற்றுமுன் அறிவித்துள்ளது.

Categories

Tech |