தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறத. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இந்நிலையில் நாளை மறுநாளுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அப்போது முழு ஊரடங்கை மேலும் இரண்டு வாரம் நீட்டிக்க தமிழக அரசுக்கு மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் மேலும் இரண்டு வரம் முழு ஊரடங்கை அமல்படுத்தவும், கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது.