Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதி 1000…. தமிழக அரசு மாஸ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மாணவிகளுக்கு 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு 7698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவிகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 7ம் தேதி 1000 செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து, கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு 1000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

Categories

Tech |