Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: இலங்கையில் ரயில் சேவை ரத்து…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன் காரணமாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொழும்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்த சூழலில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் தற்போது அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து மக்கள் தொடர்ந்து தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை பிரதமரை பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பி வந்த நிலையில் தற்போது இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஏற்கனவே புறப்பட்ட ரயில்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்கள் வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |