நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி இரவு 11.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.