Categories
மாநில செய்திகள்

Breaking: இன்று மாலை வரை இ-பதிவு செய்ய முடியாது…. அதிர்ச்சிசெய்தி….!!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த  ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் எலெக்ட்ரீஷியன், பிளம்பர், கணினி பழுது நீக்குபவர்கள், ஹவுஸ் கீப்பிங் போன்ற சுயதொழில் செய்வோருக்கு வெளியில் செல்ல இ-பதிவு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது. இன்று மாலைக்குள் இ-பதிவிற்கான இணையதள மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும் ஃபேமிலி மேன் 2 தொடரை தடைசெய்ய மத்திய அரசிடம் ஏற்கனவே வலியுறுத்தினோம். மீண்டும் வலியுறுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |