சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87.18 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 79.96 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்தது ரூ.87.40 ஆகவும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.80.19 ஆகவும் உள்ளது. இந்த புதிய விலை மாற்றம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.