Categories
உலக செய்திகள்

BREAKING : இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் …!!

அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருவதற்கு அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார்.  

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது.

அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , குஜராத் பலப்படுத்தப்பட்டதோடு டிரம்ப்க்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து தனி விமானத்தில் அதிபர் ட்ரம்ப் புறப்பட்டார்.  இந்தியாவுக்கு முதன்முறையாக வரும் டிரம்ப் நாளை 12.30 மணிக்கு அகமதாபாத் வர உள்ளார். அவரை வரவேற்க பிரதமர் மோடி உள்ளிட்டோர் தயாராக இருக்கின்றனர்.

Categories

Tech |