தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு பலரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடுவது கண்டித்ததால் சென்னையில் பணியாற்றி ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாயை இழந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் என்பவர் 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதனால் ஆனந்தனின் செயலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் கண்டித்தனர். அதனால் விரக்தியடைந்த ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.