Categories
மாநில செய்திகள்

BREAKING: அரியர் தேர்வு அட்டவணை வெளியீடு… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, நிகழ்வாண்டின் செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன. ஆனால் அரியர் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட அரிய தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து மாணவர்களுக்கான அரிய தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதனை மாணவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்திற்கு சென்று அட்டவணையை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |