Categories
மாநில செய்திகள்

BREAKING: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி…. “ஷாக்” ஆன அதிமுக…..!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான தொகுதிகளில் இறுதிகட்ட வாக்கு எண்ணிக்கையும், சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்து வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வியடைந்துள்ளார். 3,700 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் இடம் ராஜேந்திர பாலாஜி தோல்வியடைந்தார். மேலும் கே வி குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் பூவை ஜெகன் ஊட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |