Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம்..!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதிமுக உட்கட்சி தேர்தல் மற்றும் அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம் செய்ய சட்ட விதியில் திருத்தம் செய்ய செயற்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |