Categories
உலக செய்திகள்

துருக்கியில் பயங்கரம்…. வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலி…. ஒருவர் கைது….!!!

துருக்கி வெடிகுண்டு தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபர் கைதாகியிருப்பதாக உள்துறை மந்திரி தெரிவித்திருக்கிறார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் அதிக கடைகள் உள்ள இஸ்திக்லால் பகுதியில் நேற்று மாலை நேரத்தில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆறு பேர் பலியாகினர். 81 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவசர மருத்துவ சேவையும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

காவல்துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். அந்த பகுதியை சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேற்றிவிட்டு, கடைகளை மூட உத்தரவிட்டனர். இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபர் கைதாகியுள்ளார். அந்நாட்டின் உள்துறை மந்திரியான சுலேமான் சொய்லு தெரிவித்ததாவது, வெடிகுண்டு தாக்குதல் மேற்கொண்ட நபர் கைதாகி இருக்கிறார். குர்திஸ்தான் போராளிகளால் தான் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |