Categories
தேசிய செய்திகள்

தேர்தல் வெற்றி “குஜராத் முதல் டெல்லி வரை” சைக்கிளின் சென்று வாழ்த்திய பாஜக தொண்டர்…!!

தனி பெரும்பான்மையுடன் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாட குஜராத்தில் இருந்து டெல்லிக்கு பாஜக தொண்டர் சைக்கிளில் வந்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. இதனை பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.தற்போது புதிய மக்களவை பதவி ஏற்று மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் குஜராத்_தில் இருந்து டெல்லி_க்கு சைக்கிளில் வந்து வெற்றி பெற்ற பாஜகவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

பாஜகவின் வெற்றியை  கொண்டாடும் வகையில் குஜராத் மாநிலத்தின்  அம்ரேலியில் இருந்து கிம்சாந்த் சந்திராணி என்ற பாஜக தொண்டர்  ஒருவர் சைக்கிளில் டெல்லிக்கு வந்துள்ளார். அவரிடம் இது குறித்து கேட்ட போது ,மக்களவை தேர்தலில் பாஜக  300_க்கும் அதிகமான  இடங்களில் வெற்றி பெற்றால் நான் டெல்லிக்கு சைக்கிளில் வந்து மோடியையும் , அமித்ஷாவையும்  வாழ்த்துவேன் என்று முடிவெடுத்திருந்தேன்.

அதன்படி 17 நாட்கள் சைக்கிளில் மிதித்து  இங்கு வந்துள்ளேன். நான் பிரதமரிடம் பேசிய போது , உங்களுக்கு நிறைய தைரியம் இருக்கிறது என்று என்னிடம்  கூறினார். நாளைக்கு அமித் ஷாவை சந்திக்க இருப்பதாகவும் பாஜக தொண்டர் தெரிவித்தார்.

Categories

Tech |