மும்மொழி கல்வித் திட்டத்தை பாஜக கனவில் கூட நினைத்து பார்க்கக்கூடாது எச்சரிக்கை மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார் .
கல்விக் கொள்கையை முற்றிலுமாக தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய கொள்கைகளை கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இந்த பரிந்துரையை ஏற்க கூடாது என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வரும் இந்த புதிய கல்விக் கொள்கையானது இருமொழிக் கொள்கையை தவிர்த்து மும்மொழி கொள்கையை வலியுறுத்தி கட்டாயமான முறையில் முன்மொழிகிறது. இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது,
மும்மொழிக் கொள்கை என்ற கல்வித் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி கனவில் கூட நினைத்துப் பார்க்க கூடாது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்ற தேன்கூட்டில் மும்மொழிக் கொள்கை என்ற கல்லை வீச நினைக்கிறீர்கள் அது ஒருபோதும் நடக்காது என்றும், மக்களின் விருப்பம் இல்லாமல் ஹிந்தி என்ற கட்டாய கலப்படத்தை திணிக்க யார் முயன்றாலும் திமுக அதை ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என்றும் மு க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.