Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் பகுதியில் நவநீத கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீத கண்ணன் மோட்டார் சைக்கிளில் மடத்தூர் சர்வீஸ் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி இவரின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நவநீத கண்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |