Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்… உடல் நசுங்கி பலியான பெண்… திருவள்ளூரில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பெண் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் விஜயகுமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு தங்கலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்கலட்சுமி தனது உறவினரான லோகேஷ் குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது ஆந்திரா நோக்கி சென்னையிலிருந்து சென்ற கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தங்கலட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆரம்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கலட்சுமியின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஆரம்பாக்கம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |