Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசகுளம் பகுதியில் ராஜேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர் மார்த்தாண்டத்தில் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவர் குழித்துறை ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே அஜித் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜேஷ் மற்றும் அஜித் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மார்த்தாண்டம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |