Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்… பள்ளி மாணவர்களுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு கிராமத்தில் பிரகாஷ் என்பவரின் மகனான பிரவீன்குமார் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் இங்கர்சால் என்பவரின் மகனான ஜெயசூர்யா என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி முடிந்து செங்கமேடு பகுதிக்கு பிரவீன் குமாரும் சூர்யாவும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென எதிரே வந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயசூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த பிரவீன்குமாரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரவீன்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி ஜெயசூர்யாவின் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |