Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பேரம்பாக்கத்தில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது பலமாக  மோதி விட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பொன்னம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு மப்பேடு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |