Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எதிர்பாராமல் நடந்த சம்பவம்… தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தம்பட்டி மீனாட்சிபுரம் காலனியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மலையடிப்பட்டி சாலையில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ திடீரென இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பையாவிற்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரான கணேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |