Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய இளைஞர்…. பள்ளத்தில் விழுந்த இருசக்கர வாகனம்…. குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பு….!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பாச்சேத்தி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் லாடனேந்தலில் நடைபெற்ற திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் திருமணம் முடிந்ததும் அவர் வீடு திரும்பியபோது எதிர்பாராதவிதமாக லாடனேந்தல் கீழ்ப்புறத்தில் இருசக்கர வாகனம் விழுந்தது. இதில் அஜித் குமார் பலத்த காயமடைந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருபுவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |