பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்..9ம் தேதி தொடங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன்பின் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது 16 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் 41வது நாளை நெருங்கி இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று வெளியான முதல் புரோமோவில் நடிகர் கமல்ஹாசன் “உப்பு நாட்டையும் மாத்தி இருக்கு வீட்டையும் மாத்தி இருக்கு. பதவிக்கு உள்ள ஆசை அதற்குரிய பொறுப்பை செய்யவேண்டும் என்பதில் இல்லை. அத்துடன் நான் என்ன பேசுவேன் என்பதை யூகிக்க தெரிந்தவர்களுக்கு தாம் என்ன பேசுகிறோம் என்பதை யோசிக்காமல் பேசிக்கொண்டிருக்கின்றனர். அதனை அவர்களிடம் தான் பேசனும்” என்று கூறுகிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.