கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் கொரோனா பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன். ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றிஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
சமூக விலகலே கொரோனா பரவுவதை தடுக்க சிறந்த வழி என்பது தெளிவாகியுள்ளது. கொரோனா நம்மை தக்கது என்று யாரும் நினைக்க கூடாது. பிரதமர் .கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முடக்கம் என்று பிரதமர் தெரிவித்தார்.