தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுவதற்கான டோக்கன் டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த டோக்கன் மூலம் குடும்ப அட்டைதாரர்களில் யாராவது ஒருவர் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.