Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல் ஊரடங்கு அமல்…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது.

ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மேலும் இனி வரும் நாட்களில் தமிழகத்தில் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 17 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் இனிவரும் நாட்களில் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் என்று அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |