இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனையடுத்து, பிக்பாஸ் ஒவ்வொரு சீசனிலும் குறிப்பிட்ட தொகையை போட்டியாளர்களிடம் கொடுத்து யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என அறிவிப்பார். அந்த வகையில், இந்த சீசனிலும் அவர் அந்த அறிவிப்பை போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தாமரைச்செல்வி மற்றும் பாவனிக்கு தான் குறைவான வாக்குகள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரில் யார் வெளியேறுவார்கள் என்பது விரைவில் தெரியவரும்.