அரபிக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலும் நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் உருவாவதால் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, லட்சத்தீவுகள் பகுதிகளுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.