Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இன்னும் 12 மணி நேரத்தில்…. தமிழகத்தில் புயல் எச்சரிக்கை…. புதிய அலர்ட்….!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலையிலே தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக்கியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ‘ஜாபர்’ புயலாக வலுபெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புயல் நாளை வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா அருகில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, தமிழகத்தில் எண்ணூர், கடலூர், நாகை மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பாம்பன் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |